இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

0
40
#image_title

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது.

இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் இல்லை என்ற பதிலைத் தான் நம்மில் பெரும்பாலானோர் தெரிவிப்போம்.நம் வாழ்வை மேற்படுத்த பணம் மிகவும் முக்கியம்.அதனால் நம் வருமானத்தை பெருக்க நாம் முறையான வழிகளை கடைபிக்க வேண்டும்.

வருமானம் பெருக எளிய பரிகாரம்:-

ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும்.இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய்,1/4 தேக்கரண்டி சோம்பு,சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.

இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக வேண்டுமென்று மனத்தில் நினைத்து வேண்டிக் கொள்ளவும்.அடுத்து தங்களுக்கு பிடித்த கடவுள் முன் வைத்து வேண்டிக் கொள்ளவும்.பின்னர் இந்த மூட்டையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.சம்பளம் வாங்கிய உடன் இந்த மூட்டை பக்கத்தில் பணத்தை வைத்து விட்டு மறுநாள் எடுத்து அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளவும்.இப்படி தொடர்ந்து பாலோ செய்து வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்.

மேலும் மாதத்திற்கு ஒரு முறை அந்த மூட்டையில் உள்ள பொருட்களை எடுத்து விட்டு புது பொருட்களை போட்டு மூட்டை கட்டி பணப்பெட்டி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.இந்த பரிகாரத்தை அம்மாவாசை,அஷ்டமி,தேய்பிறை,பவுர்ணமி,பஞ்சமி போன்ற நாட்களில் தொடங்கலாம்.விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.