தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

0
61

தினமும் இரவில் இந்த விஷயத்தை செய்து வந்தால் கடன் பிரச்சினை மிக விரைவாக தீரும். அதற்கான எளிமையான முறையை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

இந்த ஊரடங்கு காலத்தில் கடன் பிரச்சினை இல்லாவிட்டாலும் கடன் பிரச்சினை கொரோனாவால் வந்து விட்டது. கடன் பிரச்சினை என்பது எல்லோருக்கும் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப குறைவாகவும் பெரியதாகவும் இருக்கலாம்.

இதனால் தினமும் இரவு நம் முன்னோர்கள் செய்து வரும் அற்புதமான பரிகாரத்தை செய்து வாருங்கள்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு மீதம் இருக்கும் சாப்பாட்டை தெருவில் கொண்டுப்போய் ஒரு இடத்தில் வைத்து வருவார்கள். அப்படி அவர்கள் வைக்கும் போது அங்குள்ள தெருநாய்கள் அதனை சாப்பிடும்.

அப்படி இரவில் நாம் ஆதரவற்ற நாய்களுக்கு அதாவது கால பைரவரின் வாகனமான நாய்க்கு நாம் சாப்பாடு வைக்கும் பொழுது கடன் பிரச்சனையானது நமக்கு படிப்படியாகக் குறைந்து விடும்.

பைரவரின் வாகனமான நாய்களுக்கு நாம் உணவை அளித்து வந்தால் அவரது நல்லாசி நமக்கு கிட்டும். எனவே இரவு நேரங்களில் உங்களால் முடிந்த அளவு உணவை தெரு நாய்களுக்கு உணவாக அளியுங்கள்.

புதிதான உணவைக் கூட நீங்கள் நாய்களுக்கு வைக்கலாம் அல்லது நீங்கள் சாப்பாடு வைக்கும் பொழுது சற்று அதிகமாக வைத்து இந்த மாதிரி தெரு நாய்களுக்கு உணவாக அளிக்கலாம்.

நாய்களுக்கு மீதமுள்ள சாப்பாட்டை வைப்பதினால் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் தப்பி தவறி கூட காகத்திற்கு மீதமுள்ள சாப்பாட்டை வைத்து விடாதீர்கள்.

ஏனென்றால் அது நம் முன்னோர்களின் வடிவமாக பார்க்கின்றோம்.அவர்களது பரிபூரண ஆசி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அசைவ உணவையும் எச்சில் உணவையும் கண்டிப்பாக காகத்திற்கு படைக்கக் கூடாது.

இதுபோல தொடர்ந்து நாய்களுக்கு உணவளித்து வரும்பொழுது பைரவரின் நல்லாசி கிட்டும். மேலும் பைரவரை வழிபாடு செய்வது போன்ற பலனை நமக்கு அருள் புரிவார்.

 

 

 

author avatar
Kowsalya