1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!

0
68

1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!

 

மூச்சுக்குழலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்கு இந்த பொடிகளை பொடியாக செய்து ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரும்பொழுது மூச்சுக்குழல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மூச்சுக்குழலில் உள்ள அடைப்பை சரி செய்வதற்கு முக்கியமான ஒரு பொருள் கற்பூரவள்ளி. இந்த கற்பூரவள்ளி கார சுவை கொண்டது. இது கற்பூரவள்ளி இலைக்கு அதிக குணம் உள்ளது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வியர்வையை அதிகரிக்கும். கோழையால் ஏற்பட்டுள்ள சளி நீங்க வழிவகைக்கும்.

இந்த கற்பூரவள்ளி ரத்தத்தை சுத்திகரிக்கவும், சிறுநீரகப் போக்கை அதிகம் செய்யவும் பயன்படுகிறது. நரம்பு பிரச்சனைக்கும், மனக்கோளாருக்கும் கூட இந்த கற்பூரவள்ளி பயன்படுகின்றது.

மூச்சுக்குழல் அடைப்பு நீங்க இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள்:
1. கற்பூரவள்ளி
2. வல்லாரை
3. தூதுவளை
4. பனங்கற்கண்டு.

செய்முறை:

1. மேலே கூறியுள்ள கற்பூரவள்ளி வல்லாரை தூதுவளை ஆகிய அனைத்து இலைகளையும் சம அளவில் எடுத்து கொள்ளவும்.
2. வெயிலில் நன்கு உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
5. 100 மில்லி தண்ணீர் 50 மில்லி ஆகும் வரை நன்றாக சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
6. இப்பொழுது வடிகட்டி ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளவும்.
7. சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி நீங்கள் குடித்து வரும் பொழுது நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் மூச்சுக்கு முன் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் விரைவில் சரியாகும்

author avatar
Kowsalya