திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

0
43
Frustration of not finding anything in the house that was stolen!! Strange thing the robbers did!!
Frustration of not finding anything in the house that was stolen!! Strange thing the robbers did!!

திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

திருடுவதற்காக சென்று வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த திருடர்கள் ரூ.500 ரூபாய் நோட்டு ஒன்றினை அங்கு போட்டுவிட்டு  சென்றுள்ளனர்.

டெல்லியில் ரோகிணி நகர் பகுதியில் 8-ஆம்  பிரிவில் உள்ள வீடு ஒன்றில்  எம்.ராமகிருஷ்ணன் வயது 80, என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் குருகிராமில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் சென்ற நிலையில் அவரது வீட்டருகே வசிப்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

ராமகிருஷ்ணனிடம் அவர் உங்களது வீட்டில் திருட்டுப் போய் உள்ளது என அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார். இதனால் உடனடியாக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் நுழைவு வாசலில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் உள்ளே சென்ற அவர் எந்த பொருளும் வீட்டில் இருந்து திருடு போகவில்லை என  சோதனை செய்து அறிந்து கொண்டார். மேலும்அடுத்து  அவர் போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரில் வீட்டில் எதுவும் கொள்ளை போகவில்லை. ஆனால் வாசலுக்கு அருகேரூ.500 நோட்டு ஒன்று கிடந்தது.

வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லை. அலமாரியும் உடைக்கப்படாமல் இருந்தது என்று தெரிவித்துள்ளார். வீட்டில் கொள்ளை அடிக்க எந்த பொருளும் கிடைக்காத விரக்தியில் திருட வந்தவர்கள் 500 ரூபாய் நோட்டு ஒன்றை விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.