பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! 

0
33
Happy news for passengers!! Air service to this city via Madurai from now on!!
Happy news for passengers!! Air service to this city via Madurai from now on!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! 

வருகின்ற 10-ஆம் தேதி முதல் மதுரை வழியாக கொழும்பு நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது.

துபாய், மலேசியா, இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர், டெல்லி, உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த விமான நிலையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து மதுரை நகர் வழியாக இலங்கை கொழும்புக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சேவை நாளை மறுநாள் முதல் வருகின்ற 19-ஆம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் – 2705 என்ற விமானம் ஹைதராபாத்தில் இருந்து தினமும் காலை 10:35 மணிக்கு புறப்பட்டு பகல் 12:15க்கு மதுரை விமான நிலையத்தை வந்தடையும்.

பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு 2:25 மணிக்கு கொழும்பு நகரை சென்று அடையும். இதேபோல் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:25 மணிக்கு புறப்பட்டு மாலை 4:35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் மதுரையிலிருந்து மாலை  5:15 மணிக்கு புறப்பட்டு இரவு 7:25 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை சென்றடையும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையானது பயணிகளின் ஆதரவை பொறுத்தே நீடிக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.