இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

0
157
#image_title

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

வீட்டு பூஜை அறை கோயில் போன்றது.இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.வீட்டு பூஜை அறையில் கற்பூரம்,ஊதுபத்தி,சாம்பிராணி,பன்னீர்,திருநீறு போன்றவை இருப்பது வழக்கமான ஒன்று தான்.ஆனால் தங்கள் ராசிக்கு உகந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

12 ராசிகளில் முதல் ராசியாக உள்ள மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீட்டு பூஜை அறையில் துவரம் பருப்பு வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அடுத்து ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கிராம்பை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரலாம்.மிதுன ராசிக்காரர்கள் சூடத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரலாம்.

கடக ராசிக்காரர்கள் தெய்வ சக்தி நிறைந்த சங்கை வைத்து வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.

சிம்ம ராசியில் பிறந்த நபர்கள் சந்தனக் கட்டையை வைத்து வணங்கி வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.உங்கள் ராசி கன்னி என்றால் நீங்கள் பாலை வைத்து வணங்கி வரலாம்.

துலாம் ராசிக்காரர்கள் கற்கண்டை வைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் மட்டுமே ஏற்படும்.விருச்சிகத்தில் பிறந்தவர்கள் குங்குமத்தை வைத்து வழிபட்டு வருவது நல்லது.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் விரலி மஞ்சளை பூஜை அறையில் வைப்பதினால் யோகம் உண்டாகும்.மகர ராசிக்காரர்கள் கருங்காலி பொருட்களை பூஜை அறையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்களும் கருங்காலியால் ஆன பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இறுதியாக மீனத்தில் பிறந்தவர்கள் குண்டு மஞ்சள் கிழங்கை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.