அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!

0
92
A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!
A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!

கோவை மாவட்டம் கரூர், குளித்தலை பகுதியை  சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (21). இவர் கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று  தனது மோட்டார் சைக்கிளில் கோரிப்பாளையம் முதல் மதுக்கரை சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மேலும் அதே பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் (36) என்பவர் ஈச்சர் லாரியை அதிக வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஈச்சர் லாரி ஆனது கட்டுப்பாட்டை இழந்து விக்னேஸ்வரன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும்  விக்னேஸ்வரனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கூறித்து மதுக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ஈச்சர் லாரியை இயக்கி வந்த டிரைவர் ரமேஷ்யை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K