கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
87
In Coimbatore district, a student studying in class nine was brutalized! Painter sentenced to 20 years in prison!
In Coimbatore district, a student studying in class nine was brutalized! Painter sentenced to 20 years in prison!

கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

கோவை மாவட்டம் சூலூர் பீடம் பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ். இவர்  சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சுபாஷ் பெயிண்டர் வேலையும் செய்து வருவார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இவருக்கு  ஒரு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மனைவி வீட்டில் தனியாக இருந்தார். அதை அறிந்த சுபாஷ் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

மேலும் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த மாணவி பயத்தால் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்த காரணத்தால் இரண்டு மாதம் கழித்து அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இரண்டாம் முறை இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மேலும் மாணவியின் பெற்றோர் சூலூர் போலீஸ் இனத்தில் சுபாஷின் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவாசை கைது செய்த இது குறித்து வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் சுபாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் மேலும் 30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

author avatar
Parthipan K