கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!

0
111
#image_title

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!

கடலூரில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட இரண்டு பேரை அதிரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதே நேரத்தில் கடலூரில் 4 இடங்களில் அமைந்துள்ள கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் அனுமதி பெற்று தரும் தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.

அப்போது ஓரிடத்தில் மினி மாநகராட்சி அலுவலகமே செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள கோப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டு 20 கற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் அங்கு பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டு. அது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு கட்டுமான நிறுவனங்களின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் கடலூர் குண்டு சாலை பகுதியை சேர்ந்த பரணி என்பவர் ஒரு புகார் அளித்தார் அந்த புகாரில் குண்டு சாலை பகுதியில் தான் புதியதாக கட்ட உள்ள வீட்டிற்க்கான வரைபட அனுமதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அனுப்புவதாக புகார் அளித்தார்.

மேலும் அந்த நிறுவனத்திற்கு சென்று கேட்டபோது 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் வந்து கூறினால் அவர்கள் ரூபாய் 20000 அங்கு 20000 கொடுத்துவிட்டு அனுமதி பெற்று செல்லுமாறு கூறுவதாக தெரிவித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் 20,000 ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கட்டிட வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாநகராட்சி மேயரின் உதவியாளரும் அமர்ந்திருந்த நிலையில் இந்த இருபதாயிரம் ரூபாய் பணத்தினை பரணியிடமிருந்து மேயரின் உதவியாளர் பெற்றுக் கொள்ளும் போது லஞ்ச ஒழிப்புத்துறை கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயரின் நேர்முக உதவியாளர் ரகுத்தமனையும் கட்டுமான வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஆணையர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் வீட்டிலும் தனியார் கட்டிட வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

author avatar
Savitha