முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

0
134
#image_title

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக குறைத்ததாகவும், தற்போது அது 50ஆக இருக்க வேண்டும் ஆனால் 54 ல் இருந்து குறையாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சி காலத்தில் 54 ஆக இருந்தது உண்மை தான். கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்ததாகவும், தற்போது 52.3 ஆக உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், கொரோனா பெருந்தொற்று தான் காரணம் என்றால் கேரளாவில் 19 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும், தெலங்கானாவில் 43 ஆகவும் இருப்பது எப்படி பெருந்தொர்று எல்லா மாநிலங்களிலும் தானே இருந்தது என கேள்வி எழுப்பினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியில் ஏதோ 16 ஆக இருந்ததை போலவும், தற்போது 52 ஆக இருப்பதை போல விஜயபாஸ்கர் பேசுவதாக கூறினார்.

பின்னர் பேசிய விஜயபாஸ்கர், 2012 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 4000 பேர் வீதம் மொத்தம் 33 ஆயிரத்து 223 பேர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டதாகவும், திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணீயன், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1021 மருத்துவர்கள், 1584 இதர பணியாளர்கள் என 4 ஆயிரத்து 308 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில் 1021 மருத்துவ இடங்களுக்கு 25 ஆயிரம் ம்பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார். இதே போல் 850 மருந்தாளுனர்கள் இடங்களுக்கு 27 ஆம் தேதி தேர்வு நடைபெறவுல்ளதாக பதிலளித்தார்.

author avatar
Savitha