கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

0
247

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் துவங்கிய கோரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரையில் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகபட்ச பாதிப்படைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக மீள முடியும் என்ற நிலையுள்ளதால் உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐஐபிஆரில் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் எதிர்ப்பு மருந்து, பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோயை உருவாக்கும் கொரோனாவை அழிக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு மருந்தின் செய்முறை காப்புரிமையைப் பெற இருக்கிறது. இதன்பிறகு, உலகளவில் உற்பத்தியாளர்கள் இதனை உற்பத்தி செய்வார்கள்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய உலகின் இரு மிகப்பெரிய சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் யெருஹாமில் முதல் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையைத் திறக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளதாக யெருஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது உலக மக்களிடையே நம்பிக்கையையும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்
Next articleபாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here