பட்டாசு வெடித்த நபருக்கு 15 லட்சம் அபாரதமா?

0
79

இந்தியா தொழிலாளர்களின் சொர்கபூமிகாக திகழும் ஒரு நாடு சிங்கப்பூர் குறிப்பாக தமிழர்கள் கணிசமாக சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர் அதே போல் அந்த நாட்டில் சட்ட திட்டங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் பொது இடத்தில் குப்பை போட்டாலே நம்ம நாடு போல சாதாரணமாக விட்டு வைக்க மாட்டார்கள்.

அது போல பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் (வயது 43) என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்ததாக தகவல் அந்நாட்டு போலீசாருக்கு வந்தது.

முருகன் பட்டாசு வெடித்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்து முடிந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் முருகனுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்) அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

author avatar
CineDesk