காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

0
209
#image_title

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ரஜினி உரையாற்றினார். அப்போது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா – கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அது தம்மை வேதனையடைய செய்தது என்றும் கவலை தெரிவித்தார்.

எப்போதுமே தான் விஜய்யின் நலம் விரும்பி என்று கூறிய ரஜினி, விஜய்யை போட்டியாக கருதினால் தனக்கு மரியாதை தராது என்றும், அதேபோன்று, விஜய் தம்மை போட்டியாக நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டார்.

விஜய் யின் அரசியல் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் ரஜினி.
விஜய் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் காக்கா – கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி,ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் இருந்து துரத்தும் காக்கா-கழுகு சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி!

author avatar
Savitha