பங்குச் சந்தையின் போக்கு! ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு!

0
171

ஆகஸ்ட் மாதத்தின்  இந்த வாரத்தில் பங்கு சந்தை தள்ளாட்டம் உள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.38  குறைந்து நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.10 புலிகளை இழந்தது.

ஆட்டோ, மீடியா, டிஸ்யூ பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. மேலும் மெட்டல் மற்றும் தேவை குறைந்திருந்தது. மந்தமான பொருளாதார தரவுகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த  கவலைகளை தொடர்ந்து சந்தையில் உணர முடிகிறது.

அதுவே  சந்தையின் பலவீன தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தான் சாதாரண வணிக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து  ஜூன் மாதத்தில்  இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 16.6 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலை சந்தைக்கு பாதகமாகவே அமைந்தது என்று வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சந்தை தள்ளாட்டம் கண்டிருந்தாலும் ஹெட்ச்சிஎல் டெக், எஸ்பிஐ, மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் வெகுவாக உயர்ந்து தந்தைக்கு ஆதரவாக இருந்தன என்று பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Previous articleகாட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்:? அச்சத்தில் அப்பகுதியினர்?
Next articleதமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here