சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

0
164
#image_title

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் 4 மாதம் கிடப்பில் போட்டு விட்டு மசோதா தொடர்பாக முதல் முறை விளக்கம் கேட்ட நிலையில் விளக்கம் கொடுக்கப்பட்டதாவும், தற்போது இரண்டாவது முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது விளக்கம் கேட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இரண்டு முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை என்றும் சித்த மருத்துவ பல்கலைகழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கமால் இருப்பதாக கூறினார். எனவே மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

author avatar
Savitha