சக மாணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மாணவன்!! நாட்டையே அதிர வைத்த திக் திக் சம்பவம்!!

0
61

சிங்கப்பூரில் 16 வயது பள்ளி மாணவர், சக மாணவரை கொன்றதற்காக கொலைகுற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. நேற்று பள்ளி கழிவறையில் 13 வயது மாணவர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். கொலை செய்த மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

உலகிலேயே மிகக் குறைந்த குற்றங்கள் நடக்கும் நாடாக சிங்கப்பூர் தான் இருந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பிரபலமான தனியார் பள்ளி ஒரு சில மணிநேரம் மூடப்பட்டது. மேலும் வகுப்பறையில் இருந்த மாணவர்கள், ஒரு நபர் கோடாரியுடன் சென்றதைப் பார்த்ததாக நண்பர்களுக்கு தகவல் அனுப்புவதாக ஊடகத்தால் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டபின் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணை நடந்தபோது 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் சிங்கப்பூரில் பொதுவாக இதுபோன்ற கொலை குற்றச்சாட்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும்.

ஆனால் சிறார் 18 வயதுக்கு குறைவாக இருப்பதால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனநல பரிசோதனைக்கு பின் அவரை காவலில் வைக்க அனுமதி வேண்டும் என்று நீதிபதிகள் அரசு தரப்பில் இருந்து கேட்டுக்கொண்டனர். மேலும் இந்தச் சிறுவன் 2019ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றதாக ஏற்கனவே ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என தெரிவித்திருந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட கொலைக்கு பயன்படுத்திய கோடாரி ஆன்லைனில் வாங்கியது என்று ஆரம்ப கட்டத்தில் தெரியவந்து. மேலும் கொல்லப்பட்ட சிறுவனுக்கு ‘நாங்கள் அனைவரும் துக்கத்தை அனுசரிக்கின்றோம், அவர்களது இந்தத் துக்கத்தை விளக்குவதே உண்மையிலே மிகவும் கடினமானது’ என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘நீங்கள் ஒருபோதும் நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.

author avatar
Jayachithra