நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

0
251
#image_title

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு சமையலில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு பொருள்.

வெள்ளிக்கிழமை நாளில் வீட்டில் தாமரை பூ கோலம் போட்டால் லட்சுமி தயார் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் பசுவிற்கு உணவு அளித்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

உப்பு வாங்க உகந்த நாள் வெள்ளி. இந்த நாளில் உப்பு ஜாடியில் உப்பை நிரப்பி வைப்பதினால் பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது பல நற்பலன்களை கொடுக்கும்.

அரசமர விநாயகரை வெள்ளிக் கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போகும்.

நெல், கோதுமை பொருட்களை கடனாக கொடுக்க செவ்வாய், வெள்ளி உகந்த நாள் அல்ல.

வன்னி மர பிள்ளையாரை வணங்கி வந்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

பூஜை அறையில் மண் அகலில் விளக்கேற்றினால் செல்வ செழிப்பு உண்டாகும்.