BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது!

Minister Vijayabaskar in person! Anti-Corruption Department's investigation has begun!

BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியுள்ளது. தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாக அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்பு நடைபெற்ற ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர். அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் … Read more

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை! தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு  கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் … Read more

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து … Read more

இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை!

இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது, அது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதிமுக ஆட்சியின்போது போதும், போதும், என்ற அளவிற்கு மழை பெய்து விவசாயம் செழித்து ஓங்கும் இது அந்த இரு கட்சிகளின் ராசி என்ற அடிப்படையில் பொது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது, அதுவே பல சமயங்களில் நடந்துள்ளது. உதாரணமாக, கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலம் முடியும் … Read more

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

கொரோனாவின் 3வது அலை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சென்ற மே மாதம் 21ம் தேதி 36,184 மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அன்றைய தினம் மட்டுமே தமிழகம் முழுவதும் 467 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தியதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்தப்பட்டதாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறையத் தொடங்கியது . இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கும் 1,500 … Read more

குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!

குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!

திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான வாழ்வின் முக்கிய கொண்டாட்ட நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடைவிதித்துள்ளது கர்நாடக அரசு. இந்த தடை அக்டோபர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு … Read more

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன?

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. பள்ளி கல்லூரிகள் திறக்க நேரிட்டால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க நேரிடும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்றானது கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதேபோல 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் … Read more

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனைப்படுத்தி வந்துள்ளது என்று தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நம் நாட்டில் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி விட முடியுமா? என்று கேட்டு கொண்டிருந்த மற்ற நாடுகளுக்கு முன் இன்று 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது நம் தாய் நாடு . இந்தியாவில், கரோனா … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று! நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகள் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த பொதுமக்கள் பின்னர் விழிப்புணர்வு கொண்டு அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள். இதனால் மெல்ல, மெல்ல நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது. நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கிய சமயத்தில் திடீரென்று நோய் தொற்ற பரவலின் இரண்டாவது அலை உண்டானது. இதனால் மீண்டும் நோய் தொற்று பரவல் … Read more

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் ன. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தற்போது வரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்று தான் எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு … Read more