திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் - நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, 234 தொகுதியில் இருந்தும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவில் கூடுதலாக … Read more

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஐந்து நிலை நாட்டார்கள் முல்லை மங்கள சேகரத்தை சார்ந்த ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் வழங்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வரதன் என்ற கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்தது. முன்னதாக கிராமத்து நாட்டார்கள் சார்பில் இறந்த வரதன் என்ற காளைக்கு கோவில் முன்பாக அனைவரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய … Read more

கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!

கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த பாட்டியும் வெட்டிக் கொல்லப்பட்டார். மருமகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சுபாஷ் (28) திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் … Read more

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் … Read more

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!  தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு மனைவியும் சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். பட்டப் படிப்பை முடித்துள்ள சுபாஷ்  திருப்பூரில் தங்கி … Read more

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மண்டபத்தில் இருந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி புகைப்படம் அகற்றப்பட்டதற்கு கட்சியினர் எதிர்ப்பு. மண்டப வாயிலில் அம்பேத்கர் புத்தகங்களை விற்பதற்கான அரஙகு அமைப்பதில் அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் புத்தக அரங்கம் வைக்க அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் மணி மண்டப வளாகத்தில் பூவை.ஜெகன்மூர்த்தி உருவபடம் அகற்றப்பட்டது குறித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் உதவி ஆணையரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார், 1991 முதல் 2000ம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்தார். மதுரை உதவி ஆணையராக பணி ஓய்வு பெற்ற இவர், பதவிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக … Read more

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி … Read more

 வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!

 வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!

வேலூர் காட்பாடியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் … Read more