அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு … Read more

தேவையில்லாமல் முடிச்சுப் போட வேண்டாம்! அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தேவையில்லாமல் முடிச்சுப் போட வேண்டாம்! அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கு முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று மதுரையிலே அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு ,மற்றும் செல்லூர் ராஜு ,சட்டசபை உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் கடம்பூர் … Read more

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த நினைவு இல்லத்தை சற்று முன் திறந்து வைத்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இயற்கை எழுதியதை தொடர்ந்து, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் இருக்கின்ற வீட்டை அவருடைய நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது, என்று 2017ஆம் தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. இந்த நிலையில், … Read more

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்

Dr Ramadoss with Edappadi Palanisamy

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக் தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது. தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக … Read more

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது .அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முதற்கொண்டு அனைத்தையும் செலுத்திவிட்டார் . இதற்கிடையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் … Read more

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

கொரோனா தொற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தற்சமயம் வெகுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு எடுத்துவிட்டு அமைச்சர் காமராஜ் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி ராமாபுரத்தில் இருக்கின்ற மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். … Read more

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் பாசக்காரன் மற்றும் ரோஸ் அதோடு மட்டுமல்லாமல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தவனும் பரமனுக்கு விசுவாசமாக இருப்பவனும் மதுரையில் இருப்பவன்தான் என்று தன்னைப்பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். என்னுடன் என்னுடைய பேரன்களும் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக தற்சமயம் என் வழியில் கிளம்பியிருக்கிறார்கள் என்னுடைய பேரன்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணி மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை அதிமுக சார்பாக இரண்டாவது … Read more

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில் கரூர் அருகே இருக்கின்ற காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு இரு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு பொதுமக்களின் வசதிக்காக அந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடமும் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதிமுக சார்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அந்த விழா முடிவுற்றதும் … Read more

அதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்

DMK Planned for Alliance with PMK-News4 Tamil Online Political News in Tamil Today

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் … Read more

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுடைய நிலை என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சென்ற 20 வருடங்களுக்கு மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி ,போன்ற ஏழு நபர்களும் சிறையில் இருந்து வருகிறார்கள். இதனை அடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி … Read more