வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். அவர் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய டெண்டர் ஓர் ஆண்டிற்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு எப்படி இந்த டெண்டரில் ஊழல் செய்ய இயலும். ஊழல் குற்றச்சாட்டு குறித்து தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் சந்திப்போம், … Read more

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்திருக்கின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த முதலமைச்சர், ஸ்டாலின் துண்டு … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் சமுதாயத்தினரையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்திருக்கிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்த நிலையில், அதனை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி … Read more

அமைச்சர் காமராஜ் உடல்நிலை! மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

அமைச்சர் காமராஜ் உடல்நிலை! மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலே கொரோனா தொற்றிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் பாதிப்படைந்து வருகிறார்கள். அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் தொற்றின் அளவு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் பிரிட்டனில் ஆரம்பித்து இருக்கின்ற உருமாறிய கொரோனாவும், தமிழ்நாட்டில் இப்போது பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையிலே, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சில தினங்களுக்கு முன்பு … Read more

திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ரவுடிகள் தான்! முதல்வர் கடும் தாக்கு!

திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ரவுடிகள் தான்! முதல்வர் கடும் தாக்கு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த சமயத்திலே, அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருக்கின்றார். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான் ஸ்டாலினும், அழகிரியும், ஆனாலும் கூட அழகிரிக்கு கட்சியில் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள்? திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதன் சேர்மனாக இப்பொழுது ஸ்டாலின் இருக்கிறார். பின்னாளில் உதயநிதி … Read more

ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!

ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த இடத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்து இருக்கிறார். சட்டசபை தேர்தலை ஒட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் செய்து வருகின்றார். அந்த முறையிலே நேற்றைய தினம் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். திமுக சார்பாக நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று அவர் குற்றம் … Read more

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருக்கின்றன. அந்த வகையிலே, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும், தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!

உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி உள்ளதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி இரண்டு கட்சியினர் இடையே மட்டுமின்றி அனைத்து கட்சியினர் இடையே அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கும் ஒரு செய்தியாக மாறிப்போனது. இந்த நிலையிலே, அதிமுகவின் மூத்த தலைவரும் பெரிய அதிகாரம் படைத்த முன்னாள் சட்டசபையின் தலைவருமான பி .ஹெச் . பாண்டியனின் சிலை திறப்பு விழாவானது ஜனவரி மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தேறியது. அன்றைய தினம் காலை சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை … Read more

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிக முக்கியமானது. இந்த விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கை. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா, போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளன்று பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் … Read more