மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!!

0
35
The act of the teacher because the student came with a pot!! The unfortunate result of the student!!
The act of the teacher because the student came with a pot!! The unfortunate result of the student!!

மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியை சேர்ந்தவர் தான் 17 வயதான சிறுமி. இவர் செயின்ட் சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திலேயே வீடு திரும்பி விட்டார். பெற்றோர்கள் ஏன் விரைவாக வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டதற்கு, பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்திற்கு பொட்டு வைத்துகொண்டு வந்ததால் ஆசிரியை தன்னை அடித்து விட்டதாக கூறி உள்ளார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது அறைக்கு சென்று நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. பெற்றோர்கள் சந்தேகம் கொண்டு அறையை திறக்க சொல்லி கூச்சலிட்டனர்.

ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அனைவரும் கதவை உடைத்து பார்த்த போது சிறுமி மேலே இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி அணிந்திருந்த சீருடையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்தனர்.

அதில், தனது ஆசிரியையால்தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. எனவே, பெற்றோரிடம் விசாரித்த போது பொட்டு வைத்துக் கொண்டு மாணவி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியை அடித்தாக கூறப்பட்டது.

இதனால் அந்த ஆசிரியையும், பள்ளி முதல்வரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் தாயார், என் மகள் பொட்டு வைத்த காரணத்திற்காக ஆசிரியை இவ்வாறு நடந்து கொண்டது என் மகளின் உயிரையே பறித்து விட்டது என்று கதறி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
CineDesk