கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

0
94
The bride who left her husband and ran away with her boyfriend! Shocking information that came to the cell phone!
The bride who left her husband and ran away with her boyfriend! Shocking information that came to the cell phone!

கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய வாலிபர்.இவர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் போத்தானுரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.அந்த இளம் பெண் பட்டதாரியானவர்.இவர் திருமணமான இரண்டாவது நாளே வீட்டில் காணவில்லை.

அதனை அறிந்த அவருடைய கணவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதனையடுத்து அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஓன்று வந்தது.அதில் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன் அதனால் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் இருந்தது.

அதனை கண்ட அந்த பெண்ணின் கணவரும் ,பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது குறித்து அந்த பெண்ணின் கணவர் மதுக்கரை போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே அவருடைய வீட்டின் அருகே இருந்த ஒருவருடன் காதல்வயப்பட்டிருந்தார்

.இந்த காதல் விவரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது,மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மணப்பெண் காதலுடன் ஓட்டம் பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K