அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

0
1505

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரம் பயன்கள்: சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

 

அதிமதுரத்தினால் ஏற்படும் தீமைகள்:

உடம்பில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைக்கிறது மேலும் இதனால் தலைவலி உண்டாகும் என்றும் மருத்துவ வாழ்வில் கூறப்படுகிறது அஜிமரத்தை அதிகம் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம் மேலும் இதயம் சம்பந்தமான உபாதைகள் இதயத்துடிப்பில் மாற்றம் அல்லது இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். மதுரை அதிக அளவில் பயன்படுத்துவதால் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும் பொழுது மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தால் செய்யக்கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது இதனால் நுரையீரலில் அதிகப்படியான திரவம் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது அதனால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர் அதிமதுரத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

கர்ப்பிணி பெண்கள் அதிமதுரத்தை பயன்படுத்தக் கூடாது:

கர்ப்பிணி பெண்கள் இந்த அதிமதுரத்தை கொண்டு தயாரித்த உணவு பொருட்களை தவிர்ப்போம் ோம் காரணம் இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி குறையும் என்றும் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள். மேலும் கர்ப்பி பெண்கள் பிரசவ வலி ஏற்படும் பொழுது மட்டுமே இதை சிறிதளவு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Parthipan K