சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

0
171
#image_title

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயம் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெந்தயத்தை கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

70 கிராம் வெந்தயத்தை எடுத்து அதனை ஒரு துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து பார்த்தால் முளைகட்டி இருக்கும். இந்த முளைகட்டிய வெந்தயத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

பொதுவாக வெந்தயம் கசப்பாக இருக்கும் ஆனால் இந்த முளைகட்டிய வெந்தயம் சிறிதும் கசப்பு தன்மை இல்லாமல் இனிப்பாக இருக்கும். முளைகட்டிய வெந்தயத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் வெந்தய பால் ஆக செய்து குடிக்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வெந்நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்தால் சூடான வெந்தய பால் கிடைத்து விடும். இந்த வெந்தய பாலை தினமும் காலை ஒரு வேலை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.

மேலும் இந்த வெந்தய பாலானது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்தாக மட்டுமல்லாமல் சர்க்கரை சார்ந்த நோய்கள், சக்கரை நோய்கள், மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு ,உடல் பருமன் ,உடல் சூடு, மூலநோய், மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்தாக உதவுகிறது.

author avatar
Parthipan K