திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!!
மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் பட்டபகலில் செய்த காரியம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அனந்த ராமகிருஷ்ணன். இவருக்கு அஷ்மிதா வயது18 என்ற மகள் உள்ளார். அஷ்மிதா அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஷ்மிதா கல்லூரிக்கு போகும் போது பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து வரும் நவீன் வயது 22, என்ற வாலிபருடன் நட்பு ரீதியாக பேசி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவருடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அஷ்மிதா வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதேபோல அவர் கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அவர் பரங்கிமலை ஏழுகிணறு 2-வது தெரு பகுதியில் வந்தபோது வழிமறித்த நவீன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அஷ்மிதா மறுக்கவே மறைத்து வைத்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்தம் வெளியேறியதில் மயக்கமான அஷ்மிதாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
நவீனை தேடும் போது அவர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரை போலீசார் கண்டறிந்ததும் தப்பி ஓட முயற்சி செய்தார். படத்தில் காட்டுவது போல 3 கி.மீ துரத்தி சென்று பிடித்தனர். அப்போது அவருக்கு அடிப்பட்டு மயக்கம் அடைந்தார். பின்னர் போலீசார் தண்ணீர் தெளித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.