பயங்கரவாத இயக்கம் தனது தாக்குதலை குறைந்திருப்பதாக தகவல்

0
62

ஐ. எஸ் (IS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்துவது தொடர்பான அச்சுறுத்தல் குறைந்திருப்பதாக, ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிருமிப் பரவலை முன்னிட்டு, உலக நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பல நாடுகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஐஎஸ் அமைப்பின் ஆள்சேர்ப்பு நடவடிக்கை, நிதி திரட்டல் போன்றவை பாதிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிருமிப் பரவல் சூழலில் கூடுதலானோர் இணையத்தைப் பயன்படுத்துவதால், பயங்கரவாத அமைப்புகள் நிதி திரட்ட இணையக் குற்றச்செயல்களை அதிகரித்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக், சிரியா ஆகியவற்றின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் இப்போது குறைந்துள்ளன. இருப்பினும் அந்த வட்டாரத்தில் இன்னும் சுமார் 10,000 ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.

author avatar
Parthipan K