இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

0
38

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

மருதம் பட்டையின் நன்மைகள்.

மருத மரத்திலிருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமடையும்.

இந்த மருதம் பட்டை துவர்ப்பு சுவை கொண்டது மற்றும் விட்டமின் C உள்ளது.

கோஎன்சைம்ஸ் அழைக்கப்படும் இயற்கையாக நம் உடலில் சுரக்கும் நொதிகள் தொடர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது திடீர் மாரடைப்பு, இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் பாதிப்புகள் ஏற்படுகின்றனது.

ஆனால் மருதம் பட்டையில் இந்த கோஎன்சையம்ஸ் இயற்கையாகவே மரத்தில் இருந்து உருவாகின்றன. எந்த ஒரு உணவிலும் இதில் இருக்கும் கோஎன்சையிம்ஸ் நொதிகள் எதிலும் இருப்பதில்லை.

ஒரு நாளைக்கு கோஎன்சைம்ஸ் மருதம்பட்டையில் இருந்து கிடைத்துவிடும்.இதில் உள்ள மருத்துவ குணம் தான் மாரடைப்பு இதய நோய் ரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

மருதம் பட்டையின் மருத்துவ குணங்கள்:

1: மருதம்பட்டை பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் வெண்தாமரை பொடி ஒரு ஸ்பூன் சீரக பொடி மற்றும் சிறிதளவு சுக்கு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து.

மிதமான சூட்டில் தேன் அல்லது வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் தூக்கம் இன்மை, மன அழுத்தம், இதயம் படபடப்பு, இதயக் குழாய்களில் அடைப்பு போன்ற எந்த நோய்களும் குணமாகிவிடும்.இந்த தேனீரை தினமும் அருந்தி வந்தால் அழுத்தம் குறைந்து கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2: கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்புகள் குறையும். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற சிறுநீரக பாதிப்புகள் குறையும்.

3: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து கட்டுப்பாட்டுடன் இருக்கும்.மருதம்பட்டையில் உள்ள விட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதுபோன்று உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

4: மருதம் பட்டை தேநீரை தினமும் அருந்தி வந்தால் அதில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றில் உள்ள புண்களை குணமாக்கும்.

5: உணவு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு மருதம் பட்டையை 5 கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் போதும்.

6: 5 கிராம் மருதம் பட்டை பொடியை சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

7: வாய்ப்புண் உள்ளவர்கள் மருதம்பட்டை பொடியை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் குணமாகிவிடும்.

8: பல் ஈறுகளில் உள்ள ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பட்டை பொடியை தினமும் பல் தேய்த்து வந்தால் படிப்படியாக குறையும்.

author avatar
Parthipan K