கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

0
141

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:?அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கார்டு(card) மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யும் பல வளர்ந்த நாடுகளுக்கு இடையில்,கூகுள்பே போன்பே, பேடிஎம் என யூபிஐ பணவர்த்தனையில் இந்தியாவானது முன்னிலை வகிக்கின்றது.ஏன் இந்தியாவின் பணப்பரிவர்த்தனை
கட்டமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.
அதாவது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூர் ஹைதராபாத் என முக்கிய பெருநகரங்களில் மட்டுமே யூபியை பணவர்த்தனைகள் இருந்தன.

ஆனால் தற்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் முதல் கொண்டு போன்பே,கூகுள்பே பேடிஎம், அமேசான்பே போன்ற யுபிஐ அஃப் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை சுமார் 1.2 பில்லியன் மொபைல் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு தற்போதுவரை எந்தவித கட்டணமும்
வசூலிக்கப்படுவதில்லை
இதன் காரணமாகவே,யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியானது இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனையானது ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனையை போன்றது என்றும்,ஐஎம்பிஎஸ்-ல் உள்ள கட்டணங்களை போன்று யூபிஐ பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் இருக்க வேண்டும் என்றும், வெவ்வேறு தொகையின் வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra