காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

0
47

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

‘ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சிபோல்தான் இருந்திருக்கும்’ என்ற ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம் வட இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு இடங்களுக்கு சென்றார். இமயமலை போன நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தனார் அவர்களையும் நேரில் சந்தித்தார். அப்போது அவர் ரஜினிகாந்த அவர்களை யோகி ஆதித்தனார் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காலில் விழுந்து வணங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்,

சிறுபான்மையினர்களுக்கு எதிரான யோகி ஆதித்யநாத் காலில் விழுகிறார் ரஜினி. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனது போல் ஆகியிருக்கும் தமிழ்நாடு என்று தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய உயர்ந்த மதிப்பை அவர் மீது வைத்திருக்கிறோம். தலைவர்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினையல்ல. ஆனால், காலில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இத்தகைய செயல், ஜெயிலர் படத்தின் வசூலை பாதிக்கக்ககூடும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது

author avatar
Parthipan K