மூட்டு வலி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

0
164
#image_title

மூட்டு வலி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

தற்போது உள்ள காலகட்டத்தில் இந்த மூட்டு வலியானது .அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினையாக மாறி வருகிறது. மாறிவரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் இந்த மூட்டு வலி வருகிறது. முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வரக்கூடியதாக இருந்தது .ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த மூட்டுவலி பிரச்சனையினால் பலரும் அவதிப்படுகின்றனர். மூட்டு வலியை எவ்வாறு வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் எருக்கச்செடி. இது வீட்டு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் ,காடுகளிலும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இந்த எருக்க செடியில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. இது மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய தன்மை கொண்டது. மேலும் இதை குதிகால் வலிக்கும் பயன்படுத்தலாம்.

முதலில் 3 அல்லது 4 எருக்கஞ்செடிகளை பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கத்தாழை மடலை எடுத்து அதில் உள்ள ஜெல்லை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதேனும் ஒரு எண்ணையை எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு எருக்க இலையை எடுத்து அதில் இரண்டு பக்கமும் கடுகு எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தி அதில் இந்த இயற்கை இலையை போட்டு வாட்டி கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்த ஜெல்லை மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து பிறகு எண்ணெயில் வாட்டி வைத்திருந்த எருக்க இலையை அதில் வைத்து நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும். இரவு தூங்கப் போகும் முன் இதனை செய்து இரவு முழுவதும் நன்றாக எருக்க இலையை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் மூட்டு வலியானது காணாமல் போய்விடும்.

author avatar
Parthipan K