உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

0
261
#image_title

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம்.

உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்.

பணக்கஷ்டம் தீர தினமும் மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து சந்திர மந்திரம் சொல்ல வேண்டும். சந்திர பகவானை நினைத்து ஐந்து நிமிடம் பூஜை அறையில் மனதார பிரார்த்தனை செய்யவும். சந்திர பகவானை நினைத்து 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மந்திரம்:-

ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும் சந்திர லக்ஷ்மியே நமஹ

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு, பூஜை அறைக்கு வந்து பூஜை அறையில் சுவாமி படத்திற்கு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய கடன் பிரச்சனை நீங்க வேண்டும், வருமான லட்சத்தில் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பணப் பிரச்சனை நீங்கி உங்கள் வருமானம் பெருகும்.