ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி!

0
36
#image_title

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி!

விஜேவாக தனது பணியை தொடங்கிய மகாலட்சுமி அடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.இந்நிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ரவீந்திரன் சந்திரசேகர் ஒரு சில படங்களில் தயாரித்து இருக்கிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு ரவீந்திரன்,மகாலட்சுமி திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.அப்பொழுது மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது.இதனை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத இவர்கள் இருவரும் தொடர்ந்து தாங்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருவதை காட்டுவதற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் ரவீந்திரன் நகராட்சி திடக்கழிவுகளை மாற்றும் திட்டத்தினை வைத்து சிலரிடம் காசு வாங்கி ஏமாற்றியதாக நேற்று மாலை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத மகாலட்சுமிக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரவீந்திரன் பெரிய பணக்காரர் என்று நினைத்து தான் அவரை திருமணம் செய்தேன்.ஆனால் இவரு பக்கா ஃப்ராடா இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருங்கி தோழியிடம் மகாலட்சுமி புலம்பி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.