உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!! 

0
87

உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!! 

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா இல்லையா என்பது அறிய சில எளிய பரிசோதனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம். குலதெய்வம் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத இல்லங்களில் எந்த உயிரினங்களும் வசிப்பது கிடையாது.

** குறிப்பாக பல்லி போன்ற சிறு உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வ சக்தி இருப்பதை நீங்கள் அறியலாம். கவ்லி கத்தும் சத்தம் அடிக்கடி வீட்டில் கேட்டால் குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இருப்பதாக உணர முடியும்.

** அடிக்கடி விபூதி வாசம் அல்லது கற்பூரவாசம் வீசினால் இதுவும் குலதெய்வம் இருப்பதை காட்டும் அறிகுறி ஆகும். நீங்கள் எந்த ஒரு பூஜையும் செய்யாத பட்சத்தில் வாசனைகளை நீங்கள் நுகர்ந்தால் குலதெய்வத்தை உணருங்கள்.

குலதெய்வம் ஆசிர்வாதம் இல்லை என்று நினைப்பவர்களும் குலதெய்வம் வீட்டில் இல்லை என யோசிப்பவர்களும் இந்த ஒரு எளிய விஷயத்தை தினமும் செய்து வருவதால் குலதெய்வத்தை எளிதாக வீட்டில் வரவழைத்து விடலாம்.

** பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வெறு வாயை மட்டும் கொப்பளித்து முகம் கழுவி கொள்ளுங்கள். பிறகு வாசல் படிக்கு சென்று இரண்டு கற்பூரத்தை ஏற்றி எரிய விடுங்கள்.

** கற்பூரம் முழுமையாக எரிந்து அணைந்த பின்பு நீங்கள் வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்யலாம்.

** மேலும் காக்கைக்கு சாதம் வைக்கும் பொழுது அது உடனே வந்து எடுத்து சாப்பிட்டால் பித்ருக்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர முடியும்.

** அதுவே சிறிது நேரத்திற்கு பிறகு உங்கள் வீட்டை சுற்றி முற்றி பார்த்துவிட்டு எடுத்து சாப்பிட்டால் குலதெய்வம் இருப்பதை நீங்கள் உணர முடியும்.

** பித்ருக்கள் ஆசீர்வாதம் குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாதவர்கள் காக்கைக்கு சாதம் வைத்தால் காக்கைகள் அருகில் இருந்தாலும் அவை உங்களுடைய உணவை எடுத்துக் கொள்வதில்லை