ஆப்ரேஷன் இல்லாமலேயே கண் புரையை சரி செய்யலாம்!! இதோ எளிய வழி!!

0
156
#image_title

ஆப்ரேஷன் இல்லாமலேயே கண் புரையை சரி செய்யலாம்!! இதோ எளிய வழி!!

 

கேட்ராக்ட் என்று அழைக்கப்படும் கண்புரை நோயை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

கண்புரை உள்ளவர்களுக்கு கண்கள் மசமசவென்று இருக்கும். எந்த பொருளை பார்த்தாலும் இரண்டாக தெரியும். கண்களின் உண்மையான நிறத்திலிருந்து மாறி இருக்கும். எதையாவது படிக்கும் பொழுது அதிக வெளிச்சம் தேவைப்படும். இது மாதிரி அறிகுறிகள் இருந்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை நீங்கள் தயார் செய்உனது பயன்படுத்தலாம். கண்புரை நோய் தொடங்கம் என்றால் இந்த மருந்தை சில நாட்களுக்கு எடுத்தால் போதும். அதுவே கண்புரை நோய் முற்றிப் போனால் இந்த மருந்தை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியது வரும். இந்த கண்புரை நோயை குணப்படுத்த இரண்டு விதமான மருந்துகளை நாம் பயன்படுத்த உள்ளோம். கண்புரை நோய்க்கு கண்களுக்கு வெளிப்புறமாக ஒரு மருந்தையும், உள்புறமாக ஒரு மருந்தையும் பயன்படுத்த வேண்டும்.

 

வெளிப்புறமாக பயன்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* நேத்ரமோலி இலை

* நல்லெண்ணெய்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

நாம் எடுத்து வைத்துள்ள நேத்ரமோலி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு இந்த பாததிரத்தில் போட்டுள்ள இலைகள் மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை 21 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைக்க வேண்டும். 21 நாட்கள் வெயிலில் வைத்து பிறகு எடுத்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

வடிகட்டி எடுத்து விட்டால் கண்களுக்கு வெளிப்புறமாக பயன்படுத்தக்கூடிய தைலம் கிடைத்து விடும். இதை நேத்ரமோலி தைலம் என்று அழைப்பர். இதை ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைத்து கண் புரை நோய்க்கு பயன்படுத்தலாம்.

 

உள்புறமாக பயன்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* நெல்லிக்காய் பொடி

* கடுக்காய் பொடி

* அதிமதுரப் பொடி

* தான்றிக்காய் பொடி

* லோக பஷ்பா பொடி

 

குறிப்பு: நெல்லிக்காய், கடுக்காய், திப்பி மூன்று பொருள்களையும் 1200மிலி தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி 200 மிலி அளவு வரும் அளவு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

உள்புறமாக பயன்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யும் முறை…

 

நாம் எடுத்து வைத்துள்ள நெல்லிக்காய் பொடி, அதிமதுரப் பொடி, கடுக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, லோக புஷ்பா பொடி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.

 

பிறகு காய்ச்சி வைத்துள்ள அந்த மருந்தை இந்த பொடியில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல உருண்டையாக செய்து இரண்டு உருண்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு உருண்டையை சிறிது சிறிதான பந்துகள் போல செய்து வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு மற்றொரு உருண்டையை தட்டையாக செய்து வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

 

இதை எப்படி பயன்படுத்துவது…

 

* சிறிது சிறிதாக பந்து போல வெயிலில் காய வைத்த குளிகை மருந்தை மூன்று வேலையும் உணவுக்கு பின் மாத்திரை சாப்பிடுவது போல சாப்பிடவும்.

 

* வெயிலில் காயவைத்து அரைத்த சூரணப் பொடியை காலை இரவு என இரண்டு வேலையிலும் உணவிற்கு பிறகு சிறிதளவு பொடியை எடுத்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.

 

* இந்த நேத்ரமோலி தைலத்தை எடுத்து இரண்டு கண்களுக்கும் வெளியே இரண்டு சொட்டுகள் விட்டு 10 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். கண்கள் எரிச்சல் அடைந்தால் சுத்தமான தண்ணீரால் கண்களை கழுவி விட வேண்டும்.