இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

0
76

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.