வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!

0
95
#image_title

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!

பணத் தட்டுப்பாடு நீங்க பரிகாரம்…

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு

*கல் உப்பு

*கண்ணாடி பவுல்

செய்முறை…

வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பின்னர் ஒரு கண்ணாடி பவுலில் கல் உப்பு கொட்டி நிரப்பிக் கொள்ளவும்.

அடுத்து 5 கிராம்பு எடுத்து கல் உப்பின் மேல் சொருகிக் கொள்ளவும். இதற்கு தூப தீபம் காட்டி வழிபட்டு பின்னர் இதை மற்றவர் பார்வை படும்படி வைக்கவும். இதனால் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

மேலும் கல் உப்பு + கிராம்பு வீட்டை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்கும் இதனால் லட்சுமி தாயாரின் அருள் நம் வீட்டிற்கு கிடைத்து பணம், நகை என்று செல்வ செழிப்புடன் வாழ தொடங்குவோம்.

கண் திருஷ்டி நீங்க பரிகாரம்…

தேவையான பொருட்கள்:-

*கல் உப்பு

*கிராம்பு

*தண்ணீர்

செய்முறை…

ஒரு எச்சில் படாத பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 10 முதல் 15 கிராம்பு மற்றும் 1/4 கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கிராம்பு + கல் உப்பு வாசனை தண்ணீரில் இறங்கியதும் அதை மற்றொரு பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் இந்த நீரை வீடு முழுக்க தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் மீது இருந்த கண் திருஷ்டி முழுவதும் நீங்கும்.