நம்புங்க.. காலையில் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள மொத்த கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

0
38
#image_title

நம்புங்க.. காலையில் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள மொத்த கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளில் சிறுநீரகம் முக்கிய உறுப்பாகும். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.

சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-

*உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை

*நாள்பட்ட வயிற்றுப் போக்கு

*உயர் இரத்த சர்க்கரை

சிறுநீரக கல் அறிகுறி:-

*விலா எலும்புகளுக்குக் கீழே, பக்கத்தில் மற்றும் பின்புறத்தில் கடுமையாக வலி ஏற்படுதல்

*சிறுநீர் கழிக்கும் போது வலி

*இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிற சிறுநீர்

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

பாதி எலுமிச்சம் பழ சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1/2 தேக்கரண்டி அளவு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி கலந்து பருகவும். இந்த பானம் தயார் செய்ய குளிர்ந்த நீர்(ப்ரிட்ஜ் நீர்) பயன்படுத்த கூடாது.

கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் இந்த பானத்தை பருகினால் விரைவில் உரியத் தீர்வு கிடைக்கும்.
அதேப்போல் கிட்னி ஸ்டோன் உருவாவதையும் தடுக்க உதவுகிறது. தினமும் காலையில் எழுந்த உடன் லெமென் + சால்ட் கலந்த நீரை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெறும். காரணம் இந்த பானத்தை பருகினால் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும். அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த பானத்தை பருகுவது நல்லது.