சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

0
31
#image_title

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து வந்த சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக உடனடியாக வெளியேறி விடும்.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகை கஷாயத்தை பருகலாம்.எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*மிளகு பொடி – 1/4 தேக்கரண்டி

*தனியா பொடி – 1/2 தேக்கரண்டி

*ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

*சுக்குப்பொடி – 1/4 தேக்கரண்டி

*தூதுவளை – 1 கைப்பிடி அளவு

*துளசி – 1 கைப்பிடி அளவு

*கற்பூரவல்லி – 2

*ஆடாதோடை இலை – 1/4 கைப்பிடி அளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

2.அதில் தூதுவளை,துளசி,கற்பூரவல்லி,ஆடாதோடை ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

3.பின்னர் மிளகு,தனியா விதையை பொடியாக அரைத்து அதில் சேர்க்கவும்.அதேபோல் சுக்கு மற்றும் ஏலக்காயை பொடி சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

4.அவை 3 டம்ளரில் இருந்து 1 1/2 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

5.பிறகு அந்த கஷாயத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அவற்றை பருக வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இந்த மூலிகை கஷாயம் சிறந்த தீர்வாக இருக்கும்.