எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு?

0
85

எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவர்களை விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி மருத்துவர்களை விசாரிக்க ஏழு பேர் கூடிய எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவ குழு ,தற்பொழுது மருத்துவர்கள் அளித்த  வாக்குமூலங்கல் மற்றும்  அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் முடிவடைந்ததும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மூன்று பக்கத்தில் பதில் அளித்தனர்.

அதில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் ,தைராய்டு சர்க்கரை அளவு அதிகம் போன்றவை  இருந்ததாகவும் கூறப்படுகிறது.அதற்கு சிறப்பு மருத்துவங்கள் சிகிச்சை அளித்ததாகவும்  குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக் போன்ற இனிப்புகளையும் சாப்பிட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. 20.09.16 அன்று  இரவு பத்து மணி அளவில் ஆம்புலன்ஸ் தேவை என ஜெயலலிதா இல்லத்திலிருந்து தொடர்பு கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.பின்னர் ஜெயலலிதாவிற்கு அப்போதிருந்த  உடல்நிலை பார்த்து அங்கேயே முதல் கட்ட சிகிச்சை அளித்த பிறகு தான்  மருத்துவமனைக்கு  கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்ன சர்க்கரையின் அளவை குறைக்க இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்காலிகமாக பேஸ் மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து  லண்டன் மருத்துவர்கள் உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் மற்றும்  எய்ம்ஸ் மருத்துவ குழுவினர்  சிகிச்சை அளித்து வந்ததாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K