ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே மாதிரியான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகளுக்கு இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுவதில்லை. மனித உடலில் ஆல்கஹாலின் பல பாதகமான விளைவுகள் உள்ளன. இருப்பினும், ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “குடி கூட்டு” கோட்பாட்டின் கண்டுபிடிப்புகள் சிறந்த திருமண விளைவுகளுக்கு … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதேயான குழந்தை 20 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கபட்டு உள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள லச்சாயா என்ற கிராமத்தில் ஸ்வஸ்திக் முஜகொண்டா என்கிற 2 வயதாகும் ஆண் குழந்தை நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளது. அப்போது அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த எம்.ஆர். சந்தானம் அவர்களின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. அவருடைய சகோதரர் சந்தான பாரதி இயக்குனர் மற்றும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ். சிவாஜி அறிமுகமானார். அதன் பிறகு வெளியான பல திரைப்படங்களில் இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். … Read more

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி! கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் ஓ.பி.சி பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த வித்யா ராணி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்களுடனும் கூட்டணிஅமைக்காமல் நாற்பது தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் வித்யா வீரப்பன். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இணைந்த வித்யாவை கடந்த சில … Read more

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்! பிரதமர் முடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராகவும் தெலுங்கான துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் திடிரென கடந்த … Read more

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!   கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.   மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் … Read more

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பெரும் புள்ளிகள்!

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யும் பெரும் புள்ளிகள்!   இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பெரும்பான்மையான தமிழக அரசியல் கட்சி வேட்பாளர்கள்.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் 27 ஆம் தேதியான நாளை மறுநாள் வரை காலஅவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.   இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று திமுக,அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்று … Read more

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!! கிராமம் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் வரும் போது பாதுகாப்புக்காக அதன் வழியே செல்லும் சாலைகளுக்கு ரயில்வே கேட் அமைத்திருப்பார்கள். இப்போதும் கூட பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இது போன்ற ரயில்வே கேட் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் ரயில் கடக்கும் போது அங்கிருக்கும் கேட் மூடப்படும், இதனால் சாலையின் இருபக்கமும் வரும் வாகனங்கள் … Read more

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!! ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் … Read more