விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு … Read more

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் 

TTV Dhinakaran

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி … Read more

பொங்கலுக்கு 5000 ரூபாய் ரொக்கமும் முழு செங்கரும்பும் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

பொங்கலுக்கு 5000 ரூபாய் ரொக்கமும் முழு செங்கரும்பும் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் … Read more

சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

K. Pandiarajan

சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும். திமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ளவர்கள் அப்போது கழற்றிவிடப்படுவார்கள் என்று திமுக கூட்டணி குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,அதிமுக எம்பியுமான சிவி சண்முகம் பேசியிருந்தார். சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவி … Read more

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. … Read more

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களின் மதிப்பை கூட்ட அங்குள்ள பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கடலூர் மாவட்டம் வேப்பூரில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஓடைக் கரையில் அரசு … Read more

தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் டார்கெட்! அடுத்து திமுக நடைபிணம் தான் – அண்ணாமலை சூசக பேச்சு

Annamalai IPS

தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் டார்கெட்! அடுத்து திமுக நடைபிணம் தான் – அண்ணாமலை சூசக பேச்சு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என எங்களுக்கு தெரியும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார். திமுகவின் 70 ஆண்டு கால ஊழல் கோவை மாவட்டத்தில் குறிச்சி பகுதியில் … Read more

எடப்பாடி பழனிசாமி தற்குறி?  பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்

Panruti Ramachandran

எடப்பாடி பழனிசாமி தற்குறி?  பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நீடித்து வருகிறது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றத்தின் மூலமாக கட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். அந்த வகையில் தனக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகளை … Read more

தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் தேர்வு – தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் தேர்வு – தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” தெற்கு ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 … Read more

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம் இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ … Read more