அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தின் கேனோஷா  நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை நீடிக்கிறது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது கறுப்பின இளையர் காவல்துறையால் சுடப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. செவ்வாய் இரவு நடந்த வன்செயல்களில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமுற்றார். 17 வயது வெள்ளையின இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய கும்பலுடன் … Read more

கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்களும் பலி!

கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்களும் பலி!

வடலூரில் கிணற்றில் குதித்த ஒரு இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்த இரண்டு இளைஞர்களும் கிணற்றில் பலியாகினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்து உள்ள வடமூலை கிராமத்தை சேர்ந்தவர் ரூபி. இவருக்கு 22 வயதாகிறது.தனது வீட்டுத் தேவைக்காக இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு வெட்ட சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் தேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்றின் ஆழம் சுமார் 100 அடி இருக்கும். ஆனால் இதில் வெறும் 20 அடிக்கு … Read more

கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை? காங்கிரஸில் வெடிக்கும் உள்கட்சி மோதல்கள்

கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை? காங்கிரஸில் வெடிக்கும் உள்கட்சி மோதல்கள்

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி குடும்பத்தில் இருப்பவர்களை தலைவராக நியமிக்ககூடாது என கடிதம் எழுதியவர்கள் மீது கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பதவி விலகிய நிலையில் தற்போது இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க வலியுறுத்தி அண்மையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து முன்னதாகவே இந்தியா முழுவதிலிருந்தும் 20க்கும் … Read more

அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் … Read more

தொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

தொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு 182 பவுண்டு (ரூ. 17759.60 இந்திய பண மதிப்பில்) வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை … Read more

டி வில்லியர்ஸ் இப்படிபட்ட பணியையும் செய்வாரா?

டி வில்லியர்ஸ் இப்படிபட்ட பணியையும் செய்வாரா?

ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை சாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. இதனால் தொடக்கத்தில் இருந்தே பேலன்ஸ் அணியை களம் இறக்க விரும்புகிறது. இதனால் டி வில்லியர்ஸை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைக்க அந்த அணி ஆர்வம் காட்டி வருகிறது. இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் கூறுகையில் ‘‘தரமான அணியை உருவாக்க ஏராளமான ஆலோசனைகள் … Read more

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும்200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்  இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும்  காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை … Read more

அரசு வழங்கிய ‘செட்டாப் பாக்ஸ்’களை முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!! மாவட்ட ஆட்சியர்!

அரசு வழங்கிய 'செட்டாப் பாக்ஸ்'களை முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!! மாவட்ட ஆட்சியர்!

அரசு கேபிள் டி.வி.யின் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’களை பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல், டிஜிட்டல் ஒளிபரப்பிற்காக இலவசமாக ‘செட்டாப் பாக்ஸ்’கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி.க்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால் சிலர் தனியார் டிஜிட்டல் … Read more

அரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

அரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக … Read more

இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில்  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குறிப்பிடத்தகுந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், வலிமை மற்றும் இயக்கம் விதிவிலக்கானவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் … Read more