சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!

0
34

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்:
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் “ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.

கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது.

இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை.

இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது.

இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

இந்த சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்களை பற்றியும் முள்ளங்கியை வைத்து சர்க்கரை நோயை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றியும் இங்கு பார்ப்போம்.

முள்ளங்கியின் பயன்கள்:
1. ரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை இந்த முள்ளங்கியில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த முள்ளங்கியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

2. முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீர் போக்கு சீராகி சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய தொற்றுகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும்.

3. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் முள்ளங்கி சாறுடன் சிறிதளவு தேனை கலந்து குடித்து வர மலச்சிக்கல் அஜீரணக் கோளாறு ஆகியவை நீங்கும்.

4. முள்ளங்கியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை தாராளமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

5. ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த முள்ளங்கியில் வைட்டமின் சி சத்தும் மிகுந்து காணப்படுகிறது. எனவே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதையில் பிரச்சனை இருப்பவர்கள் முள்ளங்கியை சாப்பிட்டு வருவதால் சுவாச பாதையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும்.

6. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு முள்ளங்கி மிகவும் உதவுகிறது. எனவே முள்ளங்கி வெள்ளரிக்காய் தயிர் சேர்த்து சாலட் ஆக செய்து குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை கொடுத்து வர குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொண்டு வருவதால் பசி அதிகமாக எடுக்காமல் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது.

8. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்தானது மலச்சிக்கல் செரிமான கோளாறு ஆகியவற்றை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாயு பிரச்சனையையும் உடனடியாக சரி செய்கிறது.

இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ள முள்ளங்கியை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொண்டு உண்டுவர உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளும் சரியாகி உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

author avatar
CineDesk