பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!!

0
208
#image_title

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!!

கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, உண்டு உறைவிட பள்ளியில் எழுதபட்டிறுந்த வாசகத்தை மாற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜாபூர், பல்லாரி, ராய்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் எழுதப்பட்டிறுந்த ‘கூப்பிய கையுடன் அறிவு கோயிலில் நுழையுங்கள்’ என்ற வாசகத்தை மாற்றி ‘அறிவு கோயிலில் பயமின்றி கேள்வி கேளுங்கள்’ என எழுதியுள்ளனர்.

கவிஞர் குவெம்புவை அவமதிக்கவே காங்கிரஸ் இப்படி ஒரு மாற்றத்தை செய்துள்ளனர் என பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் இத்தகைய செயலுக்கு பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Savitha