சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்!

0
137
#image_title

சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் சொந்த வீடு கனவு என்பது கனவே உள்ளது. ஆனால் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாட வாழக்கையை நடத்தவே பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பிளாட் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. வீடு கட்டுமான பொருட்களின் விலையை கண்டால் வீடு கட்டிவிடுவோமா? என்று பெரிய சந்தேகமே எழுகிறது.

இப்படி நம் கனவு இல்லம் நனவாகமல் கனவாகவே போய்விடுமோ என்ற பயத்தில் இருப்பவர்கள் முருகனுக்கு தேங்காய் பரிகாரம் செய்யவும்.

இந்த பரிகாரம் நம் சொந்த வீட்டு கனவை நனவாக்கும்….

வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டில் கைப்படி அளவு உப்பு வைத்து அதன் நடுவில் தேங்காயை நிற்க வைக்கவும்.

அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்கவும். பிறகு தேங்காய் மேல் ஏதேனும் ஒரு வழிபாட்டிற்கு உகந்த மலரை வைக்கவும். இதற்கு தீபாராதணை காட்டி மனதார வழிபடவும்.

இந்த தேங்காய்க்கு கற்பூர தீபம் காட்டி அர்ச்சனை செய்யவும். தேங்காய் மேல் உள்ள மலர் காய்ந்த பின்னர் அதை மட்டும் அப்புறப்படுத்தி விட்டு புது மலரை வைக்கவும்.

இவ்வாறு ஒன்பது வாரங்கள் செவ்வாய் கிழமை நாளில் தவறாமல் செய்து வந்தால் சொந்த வீடு கனவு விரைவில் நனவாகும்.