மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

0
29
#image_title

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பது நல்லது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*பாதம் பருப்பு – 5

*வால்நட் – 3

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*பால் – 1 கப்

செய்முறை:-

ஒரு உரலில் 5 பாதம் பருப்பு சேர்த்து இடித்து கொள்ளவும்.இதை பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து 2 வால்நட் எடுத்து அதை உரலில் போட்டு இடித்து பாதம் பருப்பு இடித்து வைத்துள்ள பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அதில் இடித்து வைத்துள்ள பாதம் பருப்பு மற்றும் வால்நட் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் இதை பருகவும்.

இவ்வாறு தோடர்ந்து பருகி வந்தோம் என்றால் மூட்டு வலி சில நாட்களில் சரியாகி விடும்.

தீர்வு 2:-

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி விதை – 1 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு தூள் – 2 சிட்டிகை

*டீ தூள் – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு பப்பாளி விதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் சிறிதளவு டீ தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.அடுத்து அதில் 2 சிட்டிகை அளவு கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முழங்கால் மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*ஏலக்காய் – 1

*வெல்லம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் 1 ஏலக்காய் மற்றும் சோம்பு 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் மூட்டு வலி பாதிப்பு சில நாட்களில் சரியாகி விடும்.