சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

0
211

சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றாலே மிகவும் யோசிக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் அவர்களின் உடல் நலத்தில் பாதிப்பு உண்டாகும். மற்ற நாட்களை விட பண்டிகை நாட்களில் உடன் இருப்பவர்கள் இனிப்புகளை உட்கொள்ளும் பொழுது இவர்களால் உட்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். சர்க்கரை இல்லாத இனிப்புகளை சாப்பிடலாம். அதேபோல எந்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டாலும் அளவுடன் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இதெல்லாம் பின்பற்ற முடியவில்லை என்றால் இனிப்புகளை சாப்பிட்டு விட்டு அதற்கு ஏற்றார் போல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வானத்தை குடிக்கலாம். பாகற்காய் ஜூஸ் வெந்தய நீர் பார்லி நீர் கிரீன் டீ இது அனைத்தும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பானங்கள் இதில் ஏதேனும் ஒன்றை குறித்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

பாகற்காய் ஜூஸ்:

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி இது இன்சுலினை கொழுப்பாக மாற்றாமல் ஆற்றலாக மாற்றும் தன்மையை கொடுக்கும்.

வெந்தய நீர்:

இதனை பண்டிகை நாட்கள் மட்டும் இன்றி தினம் தோறும் 10 கிராம் எடுத்து சுடு தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருடன் வெந்தயத்தை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும்.

பார்லி நீர்:

பொதுவாக பார்லியை உடல்நிலை சரியில்லாத நேரத்தில் குடிக்கலாம் என்று அறிவுறுத்துவர். அதேபோல இது சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் பயன்படும். இந்த நீரில் ஆண்டி ஆக்சிடென்ட் பெருமளவு உள்ளது.

கிரீன் டீ:

கிரீன் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் இன்றி அனைவரின் உடலுக்கும் மிக சிறந்த மருந்து. இந்த கிரீன் டீ தொடர்ந்து குடித்து வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை நாழிவு குறைகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு ஆய்வுகளும் நடைபெற்று தான் வருகிறது. வரும் காலங்கள் பண்டிகை நாட்களாக அமைவதால் சர்க்கரை நோயாளிகள் இவ்வாறான பானங்களை குடித்து சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

Previous articleதீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!!
Next articleவியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here