மாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரணுமா?? இதை குடித்துப் பாருங்கள்!!

0
70

மாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரணுமா?? இதை குடித்துப் பாருங்கள்!!

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் சுழற்சி தான். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை.

ஒரு சில பெண்கள் மாதவிடாய் உடனடியாக வருவதற்கு மாத்திரைகளை உட்கொள்கின்றனர், அது அந்த அளவிற்கு நல்லதல்ல எனவே முடிந்தவரை இயற்கையான முறையில் மாதவிடாய் வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது:

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 – 5 நாள்கள் வரை நிகழும். கருப்பைச் சுருங்கி விரிவதில் இரண்டு விதம் இருக்கின்றன.

ஒன்று, மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விரியும். அல்லது சுருங்கி விரிகிற வேலையைச் சரியாகச் செய்யாது. இதுதான் பீரியட்ஸ் வலிக்கான காரணம்.

இப்படியல்லாது கருப்பை சரியாகச் சுருங்கி விரிய ஆரம்பித்தால், சீரான ரத்தப்போக்கு நிகழ ஆரம்பித்துவிடும். சீரான ரத்தப்போக்கு வந்தவுடனே பீரியட்ஸ் வலியும் படிப்படியாகக் குறைந்துவிடும்.

யாருக்கெல்லாம் மாதவிடாய் வலி வரும்?

வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.

இவ்வாறு இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சீரகம்

தண்ணீர்

தேன்

செய்முறை:

1: ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

2: அதனை காலையில் எடுத்து அடுப்பில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி சுவைக்காக அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் போதும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து 45 நாட்கள் குடித்து வந்தால் மாதவிடாய் வராமல் இருந்தால் கூட உடனடியாக வந்துவிடும்.

45 நாட்கள் குடித்து வரும் பொழுது மாதவிடாய் வந்துவிட்டால் இதனை நிறுத்தி விடலாம் பிறகு மாதவிடாய் முடிந்த பிறகு இதனை தொடர்ந்து குடித்து வரலாம். இதனை தொடர்ந்து 45 நாட்கள் குடித்து வந்தால் கர்ப்பப்பை வலுவடையும்.

முக்கியமாக நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். உடல் பருமன் தைராய்டு நீர்க்கட்டி மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடல் எடை குறையும்.

நீர் கட்டியும் குறையும். அதனால் இதனை தொடர்ந்து 45 நாட்கள் குடித்து வந்தால் இது போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது இதில் எந்த ஒரு பக்கம் விளைவும் ஏற்படுத்தாது.

author avatar
Parthipan K