கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!

0
73

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!

கொரோனா வைரஸ் தொற்றினை பற்றி யாரும் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் உருவான கொரோனா என்னும் தொற்றுக் கிருமியால் இதுவரை 3000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவின் அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா, தென்கொரியா போன்ற சீனாவின் அண்டை அனைத்தும் வைரஸால் பயந்து நடுங்கியுள்ளன் இந்நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும், டில்லியில் ஒரு குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் அச்சப்படும் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் மோடி டுவிட்டரில் சில ஆலோசனை கூறியுள்ளார்.

டுவிட்டரில் கூறியிருப்பதாவது ; கொரோனா வைரஸால் அச்சம்கொள்ள தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது, சில முன் எரிச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுங்கள், கையை கழுவாமல் வாய்,மூக்கு போன்றவற்றை தொட வேண்டாம். மேலும் வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று ஒரு விழிப்புணர்வு போஸ்டரையும் இணைத்து பதிந்துள்ளார். இவ்வாறு டுவிட்டரில் கூறியிருந்தார்.

தனது இன்னொரு டுவிட்டரில், பெண்களை கெளரவப்படுத்தும் விதமாக வருகின்ற மகளிர் தினத்தன்று அவரது சமூக வலைதளத்திற்கு அட்மினாக பெண்களை நியமிக்க இருப்பதாக நரேந்திரமோடி கூறியுள்ளார். நேற்று சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இன்று பெண்களை சிறப்பிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு இட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மக்களிடையே தனது டுவிட்டரையே அதிகம் பேச வைத்துள்ளார்.

author avatar
Jayachandiran